நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்-ராம் சரண் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் சங்கராந்தியை முன்னிட்டு வருகிற ஜனவரி 7ம் தேதி வெளியாகிறது. அதேபோல் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கான மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றுவதில் பலத்த போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், சங்கராந்திக்கு ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் படங்கள் மோதுவதால் வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. நான்கு படங்கள் ஒன்றாக வந்தாலும் படங்கள் நன்றாக இருந்தால் மக்கள் அனைத்து படங்களையுமே பார்க்க வருவார்கள். கடந்த காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
சங்கராந்திக்கு இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி இன்னும் சில படங்களும் வெளியாக உள்ளன. எல்லா படங்களுமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் என்று நம்புகிறேன். என் படம் மட்டுமே ஓட வேண்டும், மற்ற படங்கள் ஓடக்கூடாது என்று சொல்லும் நேரம் இதுவல்ல. அனைவருமே ஒன்றிணைந்து பணம் சம்பாதித்தாக வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார் ராஜமவுலி.