ரஜினி, கமல் இணையும் கதை இதுதானா? | நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” |
சிபி ராஜ் கதாநாயகனாகவும் அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படம் மாயோன். கோயில் சிலைகள், புரதான சின்னங்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. அதன் பின்னணியில் உருவாகும் படம் இது.
ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். என்.கிஷோர் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இப்படத்திற்காக புதுக்கோட்டை அருகில் மாய மலையில், பாதாள அறை, புரதான சிலைகள், புரதான சின்னங்கள் போன்றவை ஆர்ட் டைரக்டரால் வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பத்மநாபபுரம் கோட்டை, மகாபலிபுர சிற்பங்கள், செஞ்சிக்கோட்டை, கீழடி போன்ற கோட்டைகள் ஒவ்வொன்றிலும் பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன.
இதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் புதையல் தேடி வருபவர்கள் சந்திக்கும் அதிசயமும், அதிர்ச்சியும் சுவாராஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், என இப்படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைக்கும். புதிய முயற்சியுடன் பல சுவாரஸ்யங்களும் இப்படத்தில் காத்திருக்கின்றன. என்றார்.