கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சிபி ராஜ் கதாநாயகனாகவும் அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படம் மாயோன். கோயில் சிலைகள், புரதான சின்னங்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. அதன் பின்னணியில் உருவாகும் படம் இது.
ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். என்.கிஷோர் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இப்படத்திற்காக புதுக்கோட்டை அருகில் மாய மலையில், பாதாள அறை, புரதான சிலைகள், புரதான சின்னங்கள் போன்றவை ஆர்ட் டைரக்டரால் வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பத்மநாபபுரம் கோட்டை, மகாபலிபுர சிற்பங்கள், செஞ்சிக்கோட்டை, கீழடி போன்ற கோட்டைகள் ஒவ்வொன்றிலும் பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன.
இதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் புதையல் தேடி வருபவர்கள் சந்திக்கும் அதிசயமும், அதிர்ச்சியும் சுவாராஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், என இப்படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைக்கும். புதிய முயற்சியுடன் பல சுவாரஸ்யங்களும் இப்படத்தில் காத்திருக்கின்றன. என்றார்.