கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சேப்டி ட்ரீம் புரொடக்ஷன், ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன், மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா, சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் சார்பில் என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் தயாரிக்கும் படம் 4 சாரி.
ஜான் விஜய், காளி வெங்கட், ரித்விகா, சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பிரசன்னா சிவராமன் இசை அமைத்திருக்கிறார். சக்திவேல் இயக்கி உள்ளார். நாளை (அக்டோபர் 29) படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சக்திவேல் கூறியதாவது: வல்லக்கோட்டை படத்திற்கு பிறகு நான் இயக்கும் படம் இது. இந்தப் படம் சமுதாயத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் படத்துக்கு 4 சாரி என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது.
படத்தில் நான்கு தனித்தனி கதைகள் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனது தவறை உணர்ந்து சாரி சொல்லும்போது அவனது வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பதை சொல்லும் படம். என்றார்.