ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛மாநாடு'. டைம் லூப் கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. தீபாவளி ரிலீஸ் என சொல்லப்பட்ட படம் போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால் நவ., 25க்கு படத்தை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இப்படத்திற்காக டப்பிங் பேசியது குறித்து எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில், ‛‛மாநாடு படத்தில் என் கதாபாத்திரத்திற்கான டப்பிங்கை 8 நாளில் முடிக்க வேண்டியதை 5 நாட்களில் முடித்துவிட்டேன். என் நாடி, நரம்பு, கழுத்து, முதுகுத்தண்டு, தொண்டை அனைத்தும் உடைந்துவிட்டன. வலி பிண்ணுது, 10 நாட்களாவது ஓய்வு தேவை. அவ்வளவு வலி. ஆனாலும் படத்தை பார்த்ததும் ஒன்று சொல்ல தோன்றுகிறது. நவ., 25 தாண்டா தீபாவளி'' என பதிவிட்டுள்ளார்.