''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛மாநாடு'. டைம் லூப் கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. தீபாவளி ரிலீஸ் என சொல்லப்பட்ட படம் போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால் நவ., 25க்கு படத்தை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இப்படத்திற்காக டப்பிங் பேசியது குறித்து எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில், ‛‛மாநாடு படத்தில் என் கதாபாத்திரத்திற்கான டப்பிங்கை 8 நாளில் முடிக்க வேண்டியதை 5 நாட்களில் முடித்துவிட்டேன். என் நாடி, நரம்பு, கழுத்து, முதுகுத்தண்டு, தொண்டை அனைத்தும் உடைந்துவிட்டன. வலி பிண்ணுது, 10 நாட்களாவது ஓய்வு தேவை. அவ்வளவு வலி. ஆனாலும் படத்தை பார்த்ததும் ஒன்று சொல்ல தோன்றுகிறது. நவ., 25 தாண்டா தீபாவளி'' என பதிவிட்டுள்ளார்.