விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக இத்தனை கோடியா? | தனுஷ், வெங்கி அட்லூரி படம் எப்போது? | கதை எழுத தயார், இயக்குனர் ஆக மாட்டேன் : யோகி பாபு | ஐந்தே மாதங்களில் சதம் அடித்த 2025, சாதனையா? சோதனையா? | வாயெல்லாம் அடைத்துவிட்டது : பிறந்தநாள் வாழ்த்தில் நெகிழ்ந்த இளையராஜா | கொலை மிரட்டல் காரணமாக மேனேஜர் மீது போலீசில் புகார் அளித்த உன்னி முகுந்தன் | மகள் பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்றை நீக்கிய ஜோதிகா : சிங்கம் 4 காரணமா? | என்றென்றும் உங்கள் நண்பன் : மணிரத்னத்துக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து | திரை உலகில் அடுத்த சோகம்... இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மறைவு |
தொண்ணூறுகளில் பூந்தோட்ட காவல்காரன், நல்லவன் உட்பட விஜயகாந்தின் படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமானவர்தான் மலையாள நடிகை வாணி விஸ்வநாத். தெலுங்கில் விஜயசாந்தி போல மலையாளத்தில் அதிக படங்களில் போலீஸ் கேரக்டர்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 1௦௦ படங்களுக்கு மேல் நடித்த இவர், கடந்த 2௦௦2ல் மலையாள வில்லன் நடிகர் பாபுராஜை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து நீண்ட நாட்கள் ஒதுங்கியிருந்தார்.
அதன்பின் அவ்வபோது ஒன்றிரண்டு படங்களில் நடித்த இவர், 2௦09ல் தனது கணவர் பாபுராஜ் இயக்கிய 'பிளாக் டாலியா' படத்தில் நடித்தார். 2011ல் தயாரிப்பாளராக மாறி தனது கணவர் இயக்கிய மனுஷ்ய மிருகம் படத்தை தயாரித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் நல்லதொரு வாய்ப்புக்காக காத்திருந்தவர், தற்போது தி கிரிமினல் லாயர் என்கிற படத்தில் மீண்டும் தனது கணவர் பாபுராஜூடன் இணைந்து நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜிதின் ஜித்து என்பவர் இயக்கும் இந்தப்படத்தை வாணி விஸ்வநாத்தே தயாரிக்கவும் செய்கிறார்.