68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு |
தமிழ் இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். பான்-இந்தியா படமாக உருவாக உள்ள இப்படத்தின் பூஜை கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.
'இந்தியன் 2' படத்தை இன்னும் முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டுத்தான் ராம் சரண் படத்திற்குச் சென்றுள்ளார் ஷங்கர். சமீபத்தில் 'இந்தியன் 2' படத் தயாரிப்பாளரை ஷங்கர் நேரில் சந்தித்துப் பேசி 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பையும் மீண்டும் ஆரம்பிக்கிறேன் என உறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் அப்படி செய்யாமல் ராம் சரண் படம் இயக்கச் சென்றுவிட்டார். இதனால், 'இந்தியன் 2' தயாரிப்பாளர் கோபமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
எனவே, ராம் சரண் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை புனேவில் வரும் 22ம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை முடித்த பிறகுதான் 'இந்தியன் 2' பக்கம் ஷங்கர் வருவாரா அல்லது இடையில் வருவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.