‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடனான தனது திருமண முறிவு குறித்த செய்தியை வெளியிட்ட சமந்தா தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் பிசியாகி விட்டார். தசரா பண்டிகையை முன்னிட்டு மிக முக்கியமானவர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நேற்றும் இன்றும் என அடுத்தடுத்து சமந்தா நடிக்கவுள்ள இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாக இருக்கின்றன.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார் சமந்தா. இந்தப்படத்தை சாந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் அறிமுக இரட்டை இயக்குனர்களான ஹரிஷ் நாராயணன்-ஹரிசங்கர் இருவரது டைரக்சனில் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி மூவிஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.