பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சென்னை எழும்பூர் அருகே அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பார்வையிட்டார். அவரது பேட்டி:'போலீஸ் மியூசியம்' என்றால் அதில் என்ன; எப்படி இருக்கும் என்ற ஆசை இருந்தது. நான் காக்கிச் சட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன். அப்பா சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தார். அதனால், போலீஸ் மீது தனி ஈர்ப்பு உண்டு. நம்மூரில் போலீஸ் துறை ஆரம்பத்தில் இருந்து, அதன் பரிமாணம் எப்படி வளர்ந்தது என்பதை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். அதிலும், அதை விளக்கியது அருமை.
தெரிந்த விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னும் ஒரு கதை உண்டு.போலீசாக நினைப்பவர்கள், போலீசால் கவரப்பட்டவர்கள் அனைவரும், இந்த மீயூசியத்தை காண வேண்டும். அதுமட்டுமின்றி, போலீசாக எப்படியெல்லாம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறியலாம்.காவல் துறை மற்றும் சிறைத்துறை பற்றி, இங்கு அருமையாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவிலே சிறந்த இடம் என்பதை, இதை பார்த்த போது புரிந்தது. குழந்தைகளை கண்டிப்பாக அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.