நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
சென்னை எழும்பூர் அருகே அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பார்வையிட்டார். அவரது பேட்டி:'போலீஸ் மியூசியம்' என்றால் அதில் என்ன; எப்படி இருக்கும் என்ற ஆசை இருந்தது. நான் காக்கிச் சட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன். அப்பா சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தார். அதனால், போலீஸ் மீது தனி ஈர்ப்பு உண்டு. நம்மூரில் போலீஸ் துறை ஆரம்பத்தில் இருந்து, அதன் பரிமாணம் எப்படி வளர்ந்தது என்பதை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். அதிலும், அதை விளக்கியது அருமை.
தெரிந்த விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னும் ஒரு கதை உண்டு.போலீசாக நினைப்பவர்கள், போலீசால் கவரப்பட்டவர்கள் அனைவரும், இந்த மீயூசியத்தை காண வேண்டும். அதுமட்டுமின்றி, போலீசாக எப்படியெல்லாம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறியலாம்.காவல் துறை மற்றும் சிறைத்துறை பற்றி, இங்கு அருமையாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவிலே சிறந்த இடம் என்பதை, இதை பார்த்த போது புரிந்தது. குழந்தைகளை கண்டிப்பாக அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.