ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான பாவனி தனது திருமண வாழ்வு குறித்து வருத்தத்துடன் பேச, அப்போது இசைவாணி தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த கதையை சொல்லி ஆறுதலாக பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வார எலிமினேஷன் நாமினேஷனில் இசைவாணியின் பெயர் வந்துள்ளது. அந்த அளவிற்கு சக போட்டியாளர்கள் விரும்பாத ஒரு நபராக இசைவாணி மாறியுள்ளார். ஆனால், அதேசமயம் ரசிகர்கள் மத்தியில் இசைவாணிக்கு நல்ல மரியாதையும் ஆதரவும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் 'கதை சொல்லட்டுமா' டாஸ்க்கில் இசைவாணி சொல்லாத அவரின் மற்றொரு சோகக்கதையை இப்போது சொல்லியுள்ளார். சக போட்டியாளர்களில் ஒருவரான பாவனி தனது திருமணம் வாழ்க்கை குறித்து கண்ணீர் சிந்த பேசினார். அப்போது இசைவாணி 'நான் ஒரு கானா பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். சில ஆண்டுகளில் நாங்கள் பிரிந்து விட்டோம். நான் இப்போது பெற்றோருடன் வசித்து வருகிறேன்' என இசைவாணி தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த கதையை கூறினார்.
இந்த சோகக்கதையை கேட்ட அவரது ரசிகர்கள் இசைவாணியின் வாழ்வில் இவ்வளவு கஷ்டமா? என மிகவும் வருத்தமடைந்து வருகின்றனர். தற்போது நாமினேஷனில் இருக்கும் இசைவாணி போட்டியாளர்களின் ஆதரவை பெறாவிட்டாலும், ரசிகர்களின் மனதை வென்று போட்டியில் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.