பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் ஆர்ஜே செந்தில் இரட்டை வேடங்களிலும், அவருக்கு ஜோடியாக ரக்ஷா, ராஷ்மி ஆகியோரும் நடித்து வந்தனர். கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட சிக்கலால் இந்த தொடர் முடித்து வைக்கப்பட்டு, சீசன் 2-வாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செந்தில் - ரச்சிதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் காமெடி ட்ராக்கில் கலக்கி வந்த ராஜூ பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக முதல் சீசனில் பட்டையை கிளப்பிய சிவகாந்தையே இந்த சீசனிலும் நடிக்க வைக்க சீரியல் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஆர்ஜே சிவகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் 'ஐ எம் பேக்' என பதிவிட்டு நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தான் மீண்டும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார். முதல் சீசனில் இவரது காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியருந்ததால் ரசிகர்களும் சிவகாந்தின் வரவேற்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.