சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் ஆர்ஜே செந்தில் இரட்டை வேடங்களிலும், அவருக்கு ஜோடியாக ரக்ஷா, ராஷ்மி ஆகியோரும் நடித்து வந்தனர். கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட சிக்கலால் இந்த தொடர் முடித்து வைக்கப்பட்டு, சீசன் 2-வாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செந்தில் - ரச்சிதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் காமெடி ட்ராக்கில் கலக்கி வந்த ராஜூ பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக முதல் சீசனில் பட்டையை கிளப்பிய சிவகாந்தையே இந்த சீசனிலும் நடிக்க வைக்க சீரியல் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஆர்ஜே சிவகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் 'ஐ எம் பேக்' என பதிவிட்டு நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தான் மீண்டும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார். முதல் சீசனில் இவரது காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியருந்ததால் ரசிகர்களும் சிவகாந்தின் வரவேற்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.