போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நாகசைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு வருகிறது. இந்தநிலையில் இந்தபடம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இதற்கு முன்பு சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்த பிடா படத்தில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டது. இது காதல் கதை என்றாலும் மனித உணர்வுகள் சம்பந்தமான விசயங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை நான் நடித்ததில் முற்றிலும் மாறுபட்ட கதை. அதோடு இந்த படத்தின் பாடல் காட்சிகளில் எனக்கு நடனமாட நிறைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தில் எனது நடிப்பைப் போலவே நடனத்தையும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.
மேலும் எனது நடனத்தை சிரஞ்சீவி பாராட்டியது எனக்கு மிகப்பெரிய எனர்ஜியை கொடுத்துள்ளது. நான்ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அவர் என்னைப்பற்றி பேசிய விதம் அவரது மகத்துவத்தை காண்பிக்கிறது. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதோடு, ஒரு ஹிந்தி வலைதொடரிலும் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.