இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
நாகசைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு வருகிறது. இந்தநிலையில் இந்தபடம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இதற்கு முன்பு சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்த பிடா படத்தில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டது. இது காதல் கதை என்றாலும் மனித உணர்வுகள் சம்பந்தமான விசயங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை நான் நடித்ததில் முற்றிலும் மாறுபட்ட கதை. அதோடு இந்த படத்தின் பாடல் காட்சிகளில் எனக்கு நடனமாட நிறைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தில் எனது நடிப்பைப் போலவே நடனத்தையும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.
மேலும் எனது நடனத்தை சிரஞ்சீவி பாராட்டியது எனக்கு மிகப்பெரிய எனர்ஜியை கொடுத்துள்ளது. நான்ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அவர் என்னைப்பற்றி பேசிய விதம் அவரது மகத்துவத்தை காண்பிக்கிறது. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதோடு, ஒரு ஹிந்தி வலைதொடரிலும் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.