இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பொதுவாக சினிமா பிரபலங்களின் சோசியல் மீடியா கணக்குகள் அவ்வபோது ஹேக்கர்ஸ் மூலமாக முடக்கப்படுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட சந்தானத்துடன் ஜோடியாக நடித்த நடிகை ஆஷ்னா ஜவேரியின் பேஸ்புக் கணக்கு கூட ஹேக்கர்ஸ்களால் முடக்கப்பட்டதாக கூறி இருந்தார். அதை தொடர்ந்து தற்போது மலையாள நடிகை நமீதா பிரமோத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக்கர்ஸ்களால் முடக்கப்பட்டது. அதே சமயம் அதிர்ஷ்டவசமாக சில மணி நேரங்களிலேயே அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
இது குறித்து கூறியுள்ள நமீதா பிரமோத், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தேவையற்ற செய்திகள் காணப்படுவதாக எனது தோழிகள் பலர் கூறினார்கள். அதன்பிறகு தான் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதை நான் அறிந்தேன். இதனால் மற்றவர்களுக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், என்று கூரியுள்ளார் நமீதா பிரமோத்.