சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் |
சென்னை: நடிகர் மம்மூட்டி, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பட்டா நிலத்தை, கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக, 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதை, கழுவேலி புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தி, நில நிர்வாக கமிஷனர், 2021 மார்ச்சில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு, நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 27க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.