தடை நீங்கியது : டிசம்பர் 12ல் 'அகண்டா 2' ரிலீஸ் அறிவிப்பு | நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி |

பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப நடிகர்களை அவ்வப்போது வம்புக்கு இழுப்பது வழக்கம். அந்தவகையில் லேட்டஸ்ட்டாக அல்லு அர்ஜுன் பற்றி புகழ்வது போல ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் வர்மா. விஷயம் இதுதான். சமீபத்தில் சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று அவரது குடும்ப வாரிசு நடிகர்கள் அனைவரும் அவருக்கு நேரிலேயே சென்று வாழ்த்துக்களை கூறினார்கள். ஆனால் அல்லு அர்ஜுன் நேரில் செல்லவில்லை.
இதை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள வர்மா, “.அல்லு அர்ஜுனின் புத்திசாலித்தனம் என்பது அவர் சிரஞ்சீவி போன்றவர்களின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்வதில் இல்லை. ஏனென்றால் அவர் தானே சுயம்புவாக தன்னை உருவாக்கி கொண்ட நட்சத்திரம்.. அதனால் பவன் கல்யான், வருண் தேஜ், ராம்சரண் போல சிரஞ்சீவியின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள கூடாது. காமெடி நடிகர் அல்லு ராமலிங்கையாவின் பேரனாக இருந்து சிரஞ்சீவியின்' குடும்ப வாரிசுகளை எதிர்த்து வெற்றி பெற்றிப்பது தான் உண்மையான வெற்றி.. அந்தவகையில் ஒரிஜினல் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு பிறகு இப்போதைய மெகாஸ்டார் அல்லு அர்ஜுன் தான் ” என கூறியுள்ளார்..
உண்மையிலேயே அல்லு அர்ஜுனை புகழ்கிறாரா..? இல்லை, சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் வளர்ந்த அல்லு அர்ஜுன் சிரஞ்சீவியின் பிறந்தநாளை கூட ஒரு பொருட்டாக மதிகவில்லையே என குத்திக்காட்டுகிறாரா...? இது உண்மையிலேயே புகழ்ச்சியா அல்லது கிண்டலா என்பது அவருக்கே வெளிச்சம்.