கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக திரையுலகிலும் பல்வேறு உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. அந்தவகையில் தெலுங்கு நடிகரும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான டிஎன்ஆர் என அழைக்கப்படும் தும்மலா நரசிம்ம ரெட்டி என்பவர் நேற்று முன் தினம் (மே-10) உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
திரையுலக பிரபலங்கள் அனைவருடனும் சகஜமாக பேசி பேட்டி எடுத்ததன் மூலம் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நட்பாக இருந்தவர் தான் டி.என்.ஆர். அதனால் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி டிஎன்ஆரின் மறைவு தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சிரஞ்சீவி,. மேலும் அவரது வீட்டிற்கே தனது தரப்பு நபரை அனுப்பி, உடனடி செலவுக்கு பயன்படும் விதமாக அவரது மனைவியிடம் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளார்.