ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்தார் இப்போதும் தொடர்ந்து படங்களில் நடிக ஆர்வம் காட்டி வரும் ஆஷா சரத் சமீபத்தில் வெளியான 'த்ரிஷ்யம்-2விலும் நடித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது, 'பீஸ்' என்கிற படத்தில் தன்னெழுச்சியாக உயர்ந்த தொழிலதிபராக நடித்து வருகிறார் ஆஷா சரத். 'வீட்டிலே ஊனு' என்கிற பெயரில் சிறிய அளவில் உணவகம் ஆரம்பித்து, அதை தானே, ஆட்டோவில் ஏற்றி பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்து முன்னேறுபவராக நடித்துள்ளார் ஆஷா சரத்.. இதற்காக ஆட்டோ ஒட்டி பழகிய ஆஷா சரத், படப்பிடிப்பின்போது எவ்வித பயமும் இன்றி ஆட்டோ ஒட்டியதை பார்த்து படக்குழுவினரே வியந்து போனார்களாம்.