பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் |
மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்தார் இப்போதும் தொடர்ந்து படங்களில் நடிக ஆர்வம் காட்டி வரும் ஆஷா சரத் சமீபத்தில் வெளியான 'த்ரிஷ்யம்-2விலும் நடித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது, 'பீஸ்' என்கிற படத்தில் தன்னெழுச்சியாக உயர்ந்த தொழிலதிபராக நடித்து வருகிறார் ஆஷா சரத். 'வீட்டிலே ஊனு' என்கிற பெயரில் சிறிய அளவில் உணவகம் ஆரம்பித்து, அதை தானே, ஆட்டோவில் ஏற்றி பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்து முன்னேறுபவராக நடித்துள்ளார் ஆஷா சரத்.. இதற்காக ஆட்டோ ஒட்டி பழகிய ஆஷா சரத், படப்பிடிப்பின்போது எவ்வித பயமும் இன்றி ஆட்டோ ஒட்டியதை பார்த்து படக்குழுவினரே வியந்து போனார்களாம்.