அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மலையாள நடிகர் சங்கத்திற்கு(அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி 2022 - 2025ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவலா பாபுவும், பொருளாளராக சித்திக்கும், இணைச் செயலாளராக ஜெயசூர்யாவும் அவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போடியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
ஆனால் துணைத் தலைவர்கள் பதவிக்கும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் தேர்தல் நடந்தது. 2 துணை தலைவர் பதவிக்கு மோகன்லால் அணி சார்பில் நடிகைகள் ஸ்வேதா மேனனும், ஆஷா சரத்தும் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து நடிகை மணியம் பிள்ளை ராஜு போட்டியிட்டார். இதில் ஆஷா சரத் தோல்வி அடைய மற்ற இருவரும் துணை தலைவராக வெற்றி பெற்றார்கள்.
11 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர். இதில் டொவினோ தாமஸ், லால், பாபுராஜ், லேனா, மஞ்சு பிள்ளை, சுதீர் கரமனா, ரச்சனா நாராயண் குட்டி, சுரபி லட்சுமி, டினிடோம், உன்னி முகுந்தன், லால், விஜய் பாபு ஆகியோர் வெற்றி பெற்றனர். நிவின் பாலி, ஹனிரோஸ் தோல்வியடைந்தனர்.