சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் சர்காரு வாரி பாட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்றுள்ள நிலையில் 40 சதவிகிதம் படப்பிடிப்பை முடித்து விட்டனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை தனது தந்தையும் நடிகருமான கிருஷ்ணாவின் பிறந்த நாளான மே 31-ந்தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் மகேஷ்பாபு. இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் மே 31-ந்தேதியை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்துள்ளார் மகேஷ்பாபு. அதாவது, மே 31-ந்தேதி டீசருக்கு பதிலாக இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்படும். அதோடு, கொரோனா அலை ஓய்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு டீசர் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.