ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
2016ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்து உள்ளார். அரசியல் பணிகள் காரணமாக 3 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பவன் கல்யாண் சற்று இடைவெளிக் பிறகு நடித்திருப்பதால் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
கடந்த 9ந் தேதி வெளியான இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குவிந்தார்கள். வெளியான முதல் வாரத்தில் 32 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் கொரோனா பிரச்னையால் பல தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டதால் இந்தப் படம் நாளை (ஏப்., 30) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே, திரைப்படம் தியேட்டரில் வெளியான 50 நாட்களுக்குப் பிறகு ஒடிடியில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார். தற்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.