ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

2016ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்து உள்ளார். அரசியல் பணிகள் காரணமாக 3 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பவன் கல்யாண் சற்று இடைவெளிக் பிறகு நடித்திருப்பதால் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
கடந்த 9ந் தேதி வெளியான இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குவிந்தார்கள். வெளியான முதல் வாரத்தில் 32 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் கொரோனா பிரச்னையால் பல தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டதால் இந்தப் படம் நாளை (ஏப்., 30) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே, திரைப்படம் தியேட்டரில் வெளியான 50 நாட்களுக்குப் பிறகு ஒடிடியில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார். தற்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.




