ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

கொரோனா இரண்டாவது அலை பரவுவது தெரிந்தும், பல நடிகர்கள் துணிச்சலாக தங்களது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வந்தார்கள். ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால் என சீனியர்களே படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட நிலையில் இளைஞர்கள் பற்றி சொல்லவா வேண்டும்.. அப்படி படப்பிடிப்பில் கலந்து கொண்ட மகேஷ்பாபு, ராம்சரண் ஆகியோர் தற்போது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்கள்.
ராம்சரண் தயாரித்து வரும் ஆச்சார்யா படக்குழுவில், சிரஞ்சீவியின் கேரவன் ட்ரைவராக பணியாற்றியவர், கொரோனா தாக்குதலால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ராம்சரண், சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
அதேபோல தற்போது சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வந்தார் மகேஷ்பாபு. இந்தநிலையில் தனது பர்சனல் ஒப்பனைக்கலைஞர் மற்றும் படக்குழுவினர் சிலர் கொரோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்ததும், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, கொரோனா சோதனை மேற்கொண்டு தன்னுடையை குடும்பத்துடன் சேர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் மகேஷ்பாபு.




