என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கடந்த வருடம் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் தனது இரண்டாவது படமாக 19 (1)(a) என்கிற படத்தில் நடித்துள்ளார். கருத்து சுதந்திரம் பற்றி இந்தப்படம் பேசுகிறது. இந்து வி.எஸ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் ரொம்பவே சுவாரசியமான அதேசமயம் மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரம் என்று ஒரு பேட்டியில் நித்யா மேனன் கூறியிருந்தாலும், அதுபற்றிய ரகசியத்தை அவர் உடைக்கவில்லை.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் இயக்குனர் இந்து வி.எஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன என்பதை வெளிபடுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “விஜய்சேதுபதி இந்தப்படத்தில் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கிறார். இந்தப்படத்தில் அவர் தமிழ், மலையாளம் இரண்டையும் சரிசமமான அளவில் பேசியிருக்கிறார்.. மலையாள வசனங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது, படப்பிடிப்பு தளத்திற்கு முன்கூட்டியே வந்து, அன்றைய காட்சிகள், வசனங்களை குறித்து விவாதித்து, அதன்பின்னர் படப்பிடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்” என புகழ்ந்து கூறுகிறார் இயக்குனர் இந்து வி.எஸ்.