பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அருவி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் படவேட்டு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதையடுத்து பிரித்விராஜ் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் 'கோல்ட் கேஸ்' (cold case) என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார் அதிதி பாலன். பிரித்விராஜ் இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அதிதி பாலன் இதில் துணிச்சலான பத்திரிகையாளராக நடித்துள்ளார். இந்தப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்தப்படம் பற்றி அதிதி பாலன் கூறும்போது, “நானும், என் அம்மாவும் சேர்ந்துதான் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டையே படித்தோம். இதில் எனக்கு தனித்தன்மை வாய்ந்த துணிச்சலான பத்திரிகையாளர் கதாபாத்திரம். ஹீரோ பிரித்விராஜூக்கும், எனக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும் நாங்கள் இருவரும் அதிக காட்சிகளில் சேர்ந்து நடிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நிவின்பாலியுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை வைத்து பார்க்கும்போது, அவரை விட பிரித்விராஜ் கொஞ்சம் சீரியஸான மனிதர் தான்.. ஆனாலும் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாம் நாளே அவருடன் எனக்கு நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டது” என கூறியுள்ளார் அதிதி பாலன்.