திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் 'குருதி' படம் இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது.. ஆனால் டிச-9ல் ஆரம்பித்த இந்தப்படத்தை கிட்டத்தட்ட 23 நாட்களில் முடித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளனர் குருதி படக்குழுவினர். குறிப்பாக இந்தப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்பாளராகவும் தனது ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எனது இந்த இருபது வருட பயணத்தில், நூறு படங்களில் நடித்துள்ள அனுபவத்தில், 'குருதி' படம் தான் மிகவும் துரிதமாக எடுக்கப்பட்ட படம் என உறுதியாக கூறுவேன். இத்தனைக்கும் இந்தப்படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகள், காட்டிற்குள் சேசிங் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. படக்குழுவினரின் ஒத்துழைப்பும் சக நடிகர்களின் அர்ப்பணிப்பும் தான் இந்தப்படத்தை விரைவில் முடிக்க உதவின. ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, ஒரு நடிகராக சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்த உதவியுள்ளது இந்த குருதி” என கூறியுள்ளார் பிரித்விராஜ்.