துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் 'குருதி' படம் இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது.. ஆனால் டிச-9ல் ஆரம்பித்த இந்தப்படத்தை கிட்டத்தட்ட 23 நாட்களில் முடித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளனர் குருதி படக்குழுவினர். குறிப்பாக இந்தப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்பாளராகவும் தனது ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எனது இந்த இருபது வருட பயணத்தில், நூறு படங்களில் நடித்துள்ள அனுபவத்தில், 'குருதி' படம் தான் மிகவும் துரிதமாக எடுக்கப்பட்ட படம் என உறுதியாக கூறுவேன். இத்தனைக்கும் இந்தப்படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகள், காட்டிற்குள் சேசிங் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. படக்குழுவினரின் ஒத்துழைப்பும் சக நடிகர்களின் அர்ப்பணிப்பும் தான் இந்தப்படத்தை விரைவில் முடிக்க உதவின. ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, ஒரு நடிகராக சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்த உதவியுள்ளது இந்த குருதி” என கூறியுள்ளார் பிரித்விராஜ்.