இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் 'குருதி' படம் இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது.. ஆனால் டிச-9ல் ஆரம்பித்த இந்தப்படத்தை கிட்டத்தட்ட 23 நாட்களில் முடித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளனர் குருதி படக்குழுவினர். குறிப்பாக இந்தப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்பாளராகவும் தனது ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எனது இந்த இருபது வருட பயணத்தில், நூறு படங்களில் நடித்துள்ள அனுபவத்தில், 'குருதி' படம் தான் மிகவும் துரிதமாக எடுக்கப்பட்ட படம் என உறுதியாக கூறுவேன். இத்தனைக்கும் இந்தப்படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகள், காட்டிற்குள் சேசிங் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. படக்குழுவினரின் ஒத்துழைப்பும் சக நடிகர்களின் அர்ப்பணிப்பும் தான் இந்தப்படத்தை விரைவில் முடிக்க உதவின. ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, ஒரு நடிகராக சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்த உதவியுள்ளது இந்த குருதி” என கூறியுள்ளார் பிரித்விராஜ்.