படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
இயக்குனர் பிரியதர்ஷன்-மோகன்லால் கூட்டணியில் உருவாக இருக்கும் வரலாற்றுப்படம் தான் மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம். கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவன் பற்றிய கதை இது.
குஞ்சாலி மரைக்கார் ஆக மோகன்லால் நடிக்க, பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரணவ் மோகன்லால் என முக்கிய தலைகள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர். ஏற்கனவே மஞ்சு வாரியர், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் கதாநாயகிகளாக தேர்வு செய்யப்பட்டள்ள நிலையில் கீர்த்தி சுரேஷும் இந்தப்படத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது.
இத்தனைக்கும் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியரும், அவரது மகன் பிரணவுக்கு ஜோடியாக கல்யாணியும் நடிக்கிறார்கள் என்றால் கீர்த்தி சுரேஷ் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற தகவலும் இப்போது வெளியாகியுள்ளது.
மரைக்காரின் படையில் அவரது வலது கையாக நம்பிக்கையான சேனாதிபதியாக சீன வீரன் சியாங் ஜுவான் என்பவன் பணியாற்றினானாம். அவனது காதலி கேரக்டரில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். ஆனால் அந்த சீன வீரனாக நடிக்கும் நடிகர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.