அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சி தொடங்கி அரசியலில் பிரவேசித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அந்த கட்சியை ஆந்திர மக்கள் ஆதரிக்கவில்லை. அதனால் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் இப்போது அரசியலை விட்டு விலகி மீண்டும் முழுநேர நடிகராகியிருக்கிறார் சிரஞ்சீவி.
இந்த நிலையில், அவரது தம்பியான நடிகர் பவன்கல்யாண், தற்போது ஜனசேனா பார்ட்டி என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். அதன்காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் அரசியல் சுற்றுப்பயணம் செய்து வரும் பவன்கல்யாண், சில தினங்களுக்கு முன்பு அனந்தபூரில் விவசாயிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, உங்களிடம் ஓட்டு கேட்பதற்காக இங்கே வரவில்லை. நானும் உங்களைப் போலவே விவசாயி தான். அதன்பிறகுதான் நான் நடிகன்.
உலக மக்களின் பசியை போக்கும் விவசாயிகள் பசியில் வாடுகிறார்கள். கடன் சுமையால் கஷ்டப்படுகிறார்கள். அதனால் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டுமென்று நான் போராடப்போகிறேன். இதற்காக விரைவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெருவாரியான விவசாயிகளை சந்திக்கப்போகிறேன் என்று பேசியுள்ளார். பவன்கல்யாணின் இந்த பேச்சுக்கு விவசாயிகள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம்.