அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
பிரேமம் சாய்பல்லவி, சேகர் கம்முலா இயக்கிய பிடா படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். அந்த படம் ஹிட்டடித்ததை அடுத்து தற்போது நானிக்கு ஜோடியாக எம்சிஏ படத்தில் நடித்துள்ளார். இதை யடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் கரு மற்றும் தனுஷின் மாரி-2 படத்திலும் நாயகியாக நடிக்கிறார் சாய்பல்லவி.
மேலும், நானியுடன் எம்சிஏ படத்தில் நடிக்க சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்தபிறகு அந்த படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜூ, நிதின் நடிப்பில் தான் அடுத்தபடியாக தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்கவும் சாய்பல்லவியை அழைத்திருக்கிறார்.
ஆனால் அந்த படத்தின் கதையை கேட்ட சாய்பல்லவி, அந்த கதை தனக்கு பிடிக்காததை அடுத்து அந்த படத்தில் நடிக்க முடியாது என்று நேரடியாகவே சொல்லிவிட்டாராம். அதனால் இப்போது சாய் பல்லவி நடிக்க மறுத்த அந்த வேடத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.