'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா |
தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நிவேதா தாமஸ். பின்னர் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்தார். அதையடுத்து கமலின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தெலுங்கில் நானியுடன் ஜென்டில் மேன் என்ற படத்தில் நடித்த நிவேதா தாமஸ், தற்போது நின்னு கோரி, ஜெய் லவகுசா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில், நின்னுகோரி படத்தில் மீண்டும் நானியுடன் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். இந்த படத்தில் மிருகம் ஆதியும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், நின்னுகோரி படம் ஜூலை 7-ந்தேதி வெளியாக இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நானியுடன் இணைந்து நடித்த நேனு லோக்கல் சூப்பர் ஹிட்டானதால், அந்த செண்டிமென்ட் இந்த படத்திலும் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் தன்னை முன்வரிசை நடிகையாக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக சொல்கிறார் நிவேதா தாமஸ்.