அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி, தற்போது தொடர் தோல்விகளால் மனம் நொந்து கிடக்கிறார்.. ரான் பேபி ரன்' படஹ்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப்பிறகு மோகன்லாலை வைத்து அடுத்தடுத்து அவர் இயக்கிய 'லோக்பால்' மற்றும் 'லைலா ஓ லைலா' இரண்டுமே தோல்விப்படங்களாக அமைந்துவிட்டன. இருந்தாலும் மோகன்லால்-ஜோஷி கூட்டணி இப்போது புதிய படத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இதற்கான ஸ்டெப்பை மோகன்லாலே எடுத்துள்ளார். காரணம் ஜோஷி போன்ற இயக்குனர்கள் சோர்ந்துவிடக்கூடாது என்பதுதான் மோகன்லாலின் எண்ணம்.
கடந்த சில வருடங்களாக எதுவும் பெரிய ஹிட் கொடுக்காததால், அடுத்து தாங்கள் இருவரும் இணையும் படம் இழந்த பார்மை மீட்டுத்தரவேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜோஷி ஸ்கிரிப்ட்டை தயார்செய்து வருகிறாராம். அதற்காகவே தனது வழக்கமான கதாசிரியர்களை விட்டுவிட்டு, 'புலி முருகன்' சூப்பர்ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணாவுடன் கூட்டணி அமைத்துள்ளாராம் ஜோஷி. மோகன்லால் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்ததும் விரைவில் இந்தப்படம் தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.