ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாசிரியாக மாறிவிட்டார் உதயகிருஷ்ணா.. 'புலி முருகன்' என்கிற ஒரே படம் இவரது வேல்யூவை ஓஹோவென உயரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டது. தமிழில் இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா) பிரபலமான கதாசிரியர்களாக இருப்பது போல மலையாளத்தில் சிபி கே.தாமஸ்-உதயகிருஷ்ணா ஜோடியும் ரொம்பவே பாப்புலரானதுதான். சுமார் 29 படங்களில் இணைந்து கதை எழுதியுள்ள இந்த ஹிட் கூட்டணி, மோகன்லாலின் 'ட்வென்டி 20', 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'கிலுக்கம் கிலுகிலுக்கம்' உள்ளிட்ட பல படங்களை வெற்றிப்படமாக்கியுள்ளது..
இந்த கூட்டணியில் இருந்து தனியாக வெளியே வந்த உதயகிருஷ்ணா முதன்முதலாக கதை எழுதிய படம் தான் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, 130 கோடிகளை தாண்டி வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் 'புலி முருகன்'.. மலையாள சினிமாவின் தரத்தையும், பிசினஸ் வேல்யூவையும் விரிவாக்கியதில் கதாசிரியர் உதயகிருஷ்ணாவுக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது.. இதனால் அவரை கௌரவிக்கும் விதமாக மலையாள இயக்குனர்கள் சங்கம் உதயகிருஷ்ணாவுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரும், இயக்குனர் சங்க செயலாளருமான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்த விழாவை முன்னின்று நடத்தியுள்ளார்.