ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் | மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால் | மீண்டும் வெளியாகும் 'சேது' |
மலையாளத்தில் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். தற்போது வசூலில் 100 கோடியை இந்த படம் தாண்டியுள்ளது. இதற்கு முன்பாக ஆபரேஷன் ஜாவா, சவுதி வெள்ளக்கா என இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள இவர், மோகன்லால் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சாதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக அவர் பஹத் பாசில் நடிக்க இருக்கும் டார்ப்பிட்டோ என்கிற படத்தையும் இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். இந்த நிலையில் ஆச்சரியமாக இந்த படத்தின் திரைக்கதையை பிரபல மலையாள வில்லன் நடிகர் ஆன பினு பப்பு என்பவர் எழுதுகிறார். இவர் மறைந்த சீனியர் நடிகரான குதிரவட்டம் பப்பு என்பவரின் மகன் தான். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர் இதே தொடரும் படத்தில் கொடூரமான சப் இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடித்த மிரட்டி இருந்தார். அவருக்கும் தொடரும் படத்தின் மூலம் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
ஏற்கனவே கிட்டத்தட்ட பத்து படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள பினு பப்பு, இயக்குனர் தருண் மூர்த்தியின் முந்தைய படமான சவுதி வெள்ளக்காவிலும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது தொடரும் படத்தில் அவர் நடித்ததை தொடர்ந்து, அவர் திறமை மீது உள்ள நம்பிக்கையில் தான் பஹத் பாசில் படத்திற்காக திரைக்கதை எழுதும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்துள்ளார் இயக்குனர் தருண் மூர்த்தி.