பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் |
மலையாள சினிமாவில் குணசித்ர நடிகராக அறியப்பட்டவர் விஷ்ணு பிரசாத். அண்ணன், தம்பி, மாதிரியான கேரக்டர்களில் நடித்து வந்தார். மாம்பழ காலம், ரன்வே, பென் ஜான்சன், பதாகா, மராத்தானாடு உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் 'காசி' என்ற படத்தில் நடித்தார்.
48 வயதான விஷ்ணு பிரசாத் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவரது மகள் தனது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தார். மேலும் குடும்பத்தினர் மருத்துவ செலவிற்காக ரூ.30 லட்சம் பணத்தையும் ரெடி பண்ணி வந்தனர்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு முன்பே விஷ்ணு பிரசாத் சிகிச்சை பலனின்றி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். பணம் புரட்ட தாமதம் ஆனதால் அவர் இறந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.