பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சமீபகாலமாகவே நடிகர் மம்முட்டி ஹீரோயிச கதைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தரும் விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி நண்பகல் நேரத்து மயக்கம், காதல் ; தி கோர், புழு, பிரம்மயுகம் என தொடர்ந்து அவரது படங்கள் நடிப்பிற்காக பேசப்பட்டு வருவதுடன் அவரது இன்னொரு வித்தியாசமான நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களை மம்முட்டி தற்போது அதிகம் தேர்வு செய்கிறார்,
அந்தவகையில் புழு, பிரம்மயுகம் படங்களை தொடர்ந்து கலம் காவல் என்கிற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. சொல்லப்போனால் வில்லன் நடிகரான விநாயகன் தான் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மம்முட்டி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் என்பவர் இயக்குகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் மம்முட்டியின் வில்லத்தனம் கலந்த பார்வையும் சிரிப்பும் நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.