ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
சமீபகாலமாகவே நடிகர் மம்முட்டி ஹீரோயிச கதைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தரும் விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி நண்பகல் நேரத்து மயக்கம், காதல் ; தி கோர், புழு, பிரம்மயுகம் என தொடர்ந்து அவரது படங்கள் நடிப்பிற்காக பேசப்பட்டு வருவதுடன் அவரது இன்னொரு வித்தியாசமான நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களை மம்முட்டி தற்போது அதிகம் தேர்வு செய்கிறார்,
அந்தவகையில் புழு, பிரம்மயுகம் படங்களை தொடர்ந்து கலம் காவல் என்கிற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. சொல்லப்போனால் வில்லன் நடிகரான விநாயகன் தான் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மம்முட்டி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் என்பவர் இயக்குகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் மம்முட்டியின் வில்லத்தனம் கலந்த பார்வையும் சிரிப்பும் நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.