ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் |

சமீபகாலமாகவே நடிகர் மம்முட்டி ஹீரோயிச கதைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தரும் விதமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி நண்பகல் நேரத்து மயக்கம், காதல் ; தி கோர், புழு, பிரம்மயுகம் என தொடர்ந்து அவரது படங்கள் நடிப்பிற்காக பேசப்பட்டு வருவதுடன் அவரது இன்னொரு வித்தியாசமான நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களை மம்முட்டி தற்போது அதிகம் தேர்வு செய்கிறார்,
அந்தவகையில் புழு, பிரம்மயுகம் படங்களை தொடர்ந்து கலம் காவல் என்கிற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. சொல்லப்போனால் வில்லன் நடிகரான விநாயகன் தான் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மம்முட்டி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் என்பவர் இயக்குகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் மம்முட்டியின் வில்லத்தனம் கலந்த பார்வையும் சிரிப்பும் நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.




