குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் |
மலையாளத் திரையுலகத்தில் உள்ள முக்கிய சங்கங்களில் ஒன்றான கேரளா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஜுன் 1ம் தேதி முதல் மலையாளத் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் நடிகர்களின் சம்பளம், கேளிக்கை வரி ஆகியவற்றை முன்னிறுத்தி அந்த ஸ்டிரைக் நடைபெற உள்ளது.
அந்த ஸ்டிரைக்குக்கு ஆதரவில்லை என 'அம்மா' என்றழைக்கப்படும் மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திங்களன்று கொச்சியில் அந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, டொவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜ், பிஜு மேனன், பாசில் ஜோசப் உள்ளிட்ட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
“மலையாளத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் நடத்தும் இந்த ஸ்டிரைக்குக்கு 'அம்மா' ஆதரவு தராது,” என அறிவித்துள்ளனர். சங்கத்தின் 'அட்-ஹாக்' கமிட்டி அதற்கான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. ஏற்கெனவே மலையாளத் திரையுலகம் நிதிச் சிக்கலில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சில தனி நபர்கள் நடத்த முயற்சிக்கும் இந்த ஸ்டிரைக் தேவையில்லாதது, பல சினிமா ஊழியர்களையும் இது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.