தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
மலையாளத் திரையுலகத்தில் உள்ள முக்கிய சங்கங்களில் ஒன்றான கேரளா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஜுன் 1ம் தேதி முதல் மலையாளத் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் நடிகர்களின் சம்பளம், கேளிக்கை வரி ஆகியவற்றை முன்னிறுத்தி அந்த ஸ்டிரைக் நடைபெற உள்ளது.
அந்த ஸ்டிரைக்குக்கு ஆதரவில்லை என 'அம்மா' என்றழைக்கப்படும் மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திங்களன்று கொச்சியில் அந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, டொவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜ், பிஜு மேனன், பாசில் ஜோசப் உள்ளிட்ட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
“மலையாளத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் நடத்தும் இந்த ஸ்டிரைக்குக்கு 'அம்மா' ஆதரவு தராது,” என அறிவித்துள்ளனர். சங்கத்தின் 'அட்-ஹாக்' கமிட்டி அதற்கான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. ஏற்கெனவே மலையாளத் திரையுலகம் நிதிச் சிக்கலில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சில தனி நபர்கள் நடத்த முயற்சிக்கும் இந்த ஸ்டிரைக் தேவையில்லாதது, பல சினிமா ஊழியர்களையும் இது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.