சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தெலுங்கு திரையுலகில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன் பாபு. இவரது மகன்கள் மஞ்சு விஷ்ணு, மஞ்சு மனோஜ் மற்றும் மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் சினிமாவில் நடித்து வருகின்றனர். இதில் மஞ்சு மனோஜ் கடந்த வருடம் பூமா மவுனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இதில் சகோதரர் மஞ்சு விஷ்ணுவுக்கு பெரிய அளவில் விருப்பமில்லை. இந்த திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மஞ்சு மனோஜின் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்து வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன் பூமாவின் உறவினர் ஒருவரையும் அடித்ததாக அப்போது ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக மஞ்சு மனோஜ் தன்னையும் தனது மனைவி பூமாவையும் தாக்கியதாக தனது தந்தை மோகன் பாபு மீதே புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தந்தை அடித்ததால் ஏற்பட்ட காயங்களையும் அவர் போலீசாரிடம் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் மோகன்பாபுவும் முதலில் தன் மகன் தான் தன்னை தாக்கினார் என்று கூறி தன் பங்கிற்கு மகன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இவர்களுக்குள் கடந்த சில மாதங்களுக்கு மேலாகவே சொத்து பிரச்சனை ஒன்று தீர்க்கப்படாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அதன் விளைவு தான் இந்த தாக்குதல் மற்றும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புகார் அளித்துக் கொண்டது என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.