கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தெலுங்கு திரையுலகில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன் பாபு. இவரது மகன்கள் மஞ்சு விஷ்ணு, மஞ்சு மனோஜ் மற்றும் மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் சினிமாவில் நடித்து வருகின்றனர். இதில் மஞ்சு மனோஜ் கடந்த வருடம் பூமா மவுனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இதில் சகோதரர் மஞ்சு விஷ்ணுவுக்கு பெரிய அளவில் விருப்பமில்லை. இந்த திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மஞ்சு மனோஜின் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்து வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன் பூமாவின் உறவினர் ஒருவரையும் அடித்ததாக அப்போது ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக மஞ்சு மனோஜ் தன்னையும் தனது மனைவி பூமாவையும் தாக்கியதாக தனது தந்தை மோகன் பாபு மீதே புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தந்தை அடித்ததால் ஏற்பட்ட காயங்களையும் அவர் போலீசாரிடம் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் மோகன்பாபுவும் முதலில் தன் மகன் தான் தன்னை தாக்கினார் என்று கூறி தன் பங்கிற்கு மகன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இவர்களுக்குள் கடந்த சில மாதங்களுக்கு மேலாகவே சொத்து பிரச்சனை ஒன்று தீர்க்கப்படாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அதன் விளைவு தான் இந்த தாக்குதல் மற்றும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புகார் அளித்துக் கொண்டது என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.