கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா | பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் |

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி 'காந்தாரா' படத்திற்கு பிறகு இந்திய அளவில் கவனம் பெறும் நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் முதல் முறையாக தெலுங்கில் 'ஜெய் ஹனுமான்' படத்தில் நடிக்கின்றார் என அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து இரண்டாவது தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் ரிஷப் ஷெட்டி. அந்த தகவலின் படி, எஸ்.எஸ். ராஜமவுலியின் உதவி இயக்குநர் அஸ்வின் கங்கராஜூ இயக்கத்தில் தான் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது பிரீயட் ஆக்சன் டிராமா ஆக உருவாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பான் இந்திய படமாக உருவாகிறது. மேலும், இப்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.