என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். நடிகையும் தனது காதலியுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளி வருவதற்கான தீவிர முயற்சிகளிலு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் தர்ஷன். அந்த வகையில் நேற்று (ஆக-1) தர்ஷன் மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி உள்ள பவித்ரா கவுடா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கலைத்து விட வாய்ப்பு இருக்கிறது என கூறி சிறப்பு புலனாய்வு குழுவினர் அளித்த மனுவின் பெயரில் நடைபெற்ற இந்த விசாரணையை தொடர்ந்து தர்ஷன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் அனைவருக்கும் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மெத்தை வழங்க அனுமதிக்க வேண்டுமென தர்ஷன் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.