மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். பல வருடங்களாக முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை இவர் கொடுத்து இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் சுகுமாரின் மனைவி தபிதாவும் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். ஆம்... தெலுங்கு திரையுலகின் பிரபலமான குணச்சித்திர நடிகரான ராவ் ரமேஷ் தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள மாருதி நகர் சுப்பிரமணியம் என்கிற படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு திரைப்பட வெளியீட்டாளராக சினிமாவில் தற்போது நுழைந்துள்ளார் தபிதா. இந்த படத்தை லக்ஷ்மன் காரியா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஆக., 23ம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. இந்த தகவலை தபிதாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.