100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். பல வருடங்களாக முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை இவர் கொடுத்து இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் சுகுமாரின் மனைவி தபிதாவும் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். ஆம்... தெலுங்கு திரையுலகின் பிரபலமான குணச்சித்திர நடிகரான ராவ் ரமேஷ் தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள மாருதி நகர் சுப்பிரமணியம் என்கிற படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு திரைப்பட வெளியீட்டாளராக சினிமாவில் தற்போது நுழைந்துள்ளார் தபிதா. இந்த படத்தை லக்ஷ்மன் காரியா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஆக., 23ம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. இந்த தகவலை தபிதாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.