கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கிய லைகர் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து ஐ ஸ்மார்ட் என்கிற வெற்றி படத்தை கொடுத்திருந்த பூரி ஜெகன்நாத் அதன் இரண்டாம் பாகமாக டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக காவ்யா தாபர் நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்ற ஸ்டெப்பமார் என்கிற முதல் பாடல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாடலாக மார் முந்தா சோட் சிந்தா என்கிற பாடல் வெளியானது. ஆனால் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் தெலுங்கானாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் அடிக்கடி பேசும் ஒரு முக்கிய வசனத்தை கிண்டல் அடிக்கும் விதமாக இடம் பெற்றுள்ளதாக தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர் ரஜிதா ரெட்டி என்பவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் படக்குழுவினருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.




