25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி, தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் தவறி விழும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவர்தான். நடிப்பில் நல்ல திறமை கொண்ட இவர், அதிகம் சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீநாத் பாஷி விழா மேடையில் ஆவேசம் படத்தில் இடம் பெற்ற ஜடா என்கிற பாடலை பாடினார். அப்போது கீழ் இருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தவே, அவரும் உற்சாக மிகுதியால் சில மோசமான வார்த்தைகளையும் பிரயோகித்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவர் இப்படி பொதுவெளியில் மோசமாக வார்த்தைகளை பேசியதற்காக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு இது போன்ற விஷயங்கள் புதிதல்ல.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில் போது அந்த நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளரிடம் இதேபோன்று அநாகரிகமான வார்த்தைகளை ஸ்ரீநாத் பாஷி பேசியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அதனாலேயே அவருக்கு மலையாள திரையுலகில் ரெட் கார்டு போடப்படும் அளவிற்கு நிலைமை சீரியசாக சென்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.