சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‛மலையாளி பிரம் இந்தியா' என்கிற படம் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‛ஜன கன மன' படத்தை இயக்கிய டிஜே ஜோஸ் ஆண்டனி இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் படங்களை தயாரித்து வரும் லிஸ்டின் ஸ்டீபன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முதல் நாள், பிரபல கதாசிரியரும் ஆர்டினரி என்கிற சூப்பர் ஹிட் படத்திற்கு கதை எழுதியவருமான நிஷாத் கோயா என்பவர் இந்த படத்தின் திரைக்கதை, கடந்த 2021ல் டைரக்டர் ஜோஷி இயக்குவதற்காக தான் எழுதிய படத்திற்கான திரைக்கதை போலவே இருக்கிறது என்று கூறி அதற்கான கதைச் சுருக்கத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார். இது படத்தின் தயாரிப்பாளர் லிஸ்டின்ஸ் ஸ்டீபனின் கவனத்திற்கு சென்றது.
உடனே நிஷாத் கோயாவை தொடர்பு கொண்டு, “நீங்கள் செய்வது நியாயம் இல்லை.. உங்கள் படத்தின் கதை என நீங்கள் நினைத்திருந்தால் நான் படம் ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆகி உள்ளது. நானும் சந்திக்கும் அளவிற்கு எளிதாக தான் இருந்தேன். அப்போதே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். படம் வெளியாவதற்கு முதல் நாள் இதுபோன்று செய்வது திரை உலகில் இருக்கும் உங்களைப் போன்ற மூத்தவர்களுக்கு அழகு இல்லை.. நீங்கள் வெளியிட்டுள்ள பதிவை தயவு செய்து நீக்குங்கள்” என்று கூறியதும் உடனடியாக தனது பதிவை நீக்கிவிட்டார் நிஷாத் கோயா.