25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கடந்த 20 வருடங்களாகவே முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தனது புதிய இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அஜித்துடன் விடாமுயற்சி, கமல் நடிக்கும் தக் லைப் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து ஐடென்டிட்டி என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ள திரிஷா சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உகாதி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் வருகை தந்தார். அப்போது அவருக்கு ஒரு சிறிய பூந்தொட்டியை பரிசளித்து உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிஷா. இது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திரிஷா.