மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. ஒரு வரலாற்று படமாக மல்யுத்த பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தார் வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போன லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ஆனாலும் ரிலீசுக்கு முன்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் கால்வாசியை கூட ஈடு செய்ய இந்த படம் தவறியது. மேலும் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக பார்த்த அனைவருமே திரைக்கதை ஈர்க்கவில்லை, படம் மிக மெதுவாக நகர்கிறது என்பதை தான் குறையாக சுட்டிக் காட்டினார்கள். இதன் காரணமாக தோல்வியை தான் இந்த படம் பரிசாக பெற்றுள்ளது.
படம் வரவேற்பு பெறாததற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஹரீஷ் பெராடி வேறொரு வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார். அதாவது, “இங்கே மோகன்லாலுக்கு எதிராக ஒரு லாபி செய்யப்பட்டு வருகிறது. அரசியலுடன் அவரை தொடர்புபடுத்தி வேண்டுமென்றே படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்கிறார்கள். இதுவே இந்த படத்தில் வேறு எந்த ஒரு நடிகர் நடித்திருந்தாலும் நிச்சயமாக வெற்றி படமாகி இருக்கும். ரசிகர்களுக்கு புதுமையை வரவேற்கும் எண்ணம் குறைந்து விட்டது” என்று கூறியுள்ளார் ஹரீஷ் பெராடி.
மோகன்லாலின் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும் அவரது உழைப்பு வீணாகி விட்டதே என்கிற ஆதங்கத்தாலும் தான் ஹரீஷ் பெராடி இப்படி கூறியுள்ளார்.