பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர்களின் ஒருவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான இயக்குனர் தேஜா, நடிகர் ராணாவை வைத்து நேனே ராஜா நேனே மந்திரி என்கிற ஹிட் படத்தை சில வருடங்களுக்கு முன்பு கொடுத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ராணாவை வைத்து ராட்சச ராஜா என்கிற புதிய படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த படம் 1930களில் சென்னையில் நடைபெறுவது போன்று உருவாக்கப்பட இருக்கிறது. குறிப்பாக நிஜ சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குகிறார் தேஜா. இதற்கு கேஜிஎப், சலார் போன்று பீரியட் படங்களுக்கு இசையமைத்த அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் ரவி பர்சூரை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். சென்னையில் தான் பிறந்து வாழ்ந்த காலகட்டங்களில் கேள்விப்பட்ட நிஜமான கேங்ஸ்டர் கதைகளை தான் இந்த படத்தில் சொல்ல இருக்கிறாராம் இயக்குனர் தேஜா.