மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ஒரே நேரத்தில் மலையாளத்தில் இரண்டு படங்கள் உருவாகியுள்ளன. இதில் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் கால்பந்து விளையாட்டிற்கு கமெண்டரி கொடுக்கும் ஒரு இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தை மனு சி. குமார் என்பவர் இயக்கியுள்ளார். இன்னொரு பக்கம் பிரபல கமர்சியல் இயக்குனரான ஜோஷி டைரக்ஷனில் உருவாகியுள்ள ஆண்டனி என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் கல்யாணி.
இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்த ரிலீஸாவதாக சொல்லப்பட்டு வந்தது. சேஷம் மைக்கில் பாத்திமா படம் வரும் நவம்பர் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு நவம்பர் 17ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.