சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்ற விவசாயி கலந்து கொண்டுள்ளார். இவர் தன் உடலில் கிலோ கணக்கில் நகை அணிந்து கொண்டு திரிவதன் மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சியில் அவர் புலி பல்லால் செய்யப்பட்ட டாலர் ஒன்றை அணிந்துள்ளார்.
அதை நிஜமான புலி பல் தான் என்று வெளிப்படையாகவும் நிகழ்ச்சியில் பேசி வந்தார். புலி பல் வாங்குவதோ, விற்பதோ, வைத்திருப்பதோ இந்திய வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் இதுகுறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் புகார் செய்யவே கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளும், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் காவல் நிலைய அதிகாரிகளுகம் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர், பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்து ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.