மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்ற விவசாயி கலந்து கொண்டுள்ளார். இவர் தன் உடலில் கிலோ கணக்கில் நகை அணிந்து கொண்டு திரிவதன் மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சியில் அவர் புலி பல்லால் செய்யப்பட்ட டாலர் ஒன்றை அணிந்துள்ளார்.
அதை நிஜமான புலி பல் தான் என்று வெளிப்படையாகவும் நிகழ்ச்சியில் பேசி வந்தார். புலி பல் வாங்குவதோ, விற்பதோ, வைத்திருப்பதோ இந்திய வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் இதுகுறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் புகார் செய்யவே கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளும், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் காவல் நிலைய அதிகாரிகளுகம் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர், பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்து ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




