ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது |
1990களில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. சமீப காலமாக முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள அவர், ஆந்திர அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். தெலுங்கில் 2013ம் ஆண்டு டாட்டர் ஆப் வர்மா என்ற படத்தில் நடித்திருந்தவர், தமிழில் கடைசியாக 2015ல் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நாயகனாக நடித்த ‛என் வழி தனி வழி' என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மீண்டும் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டுகின்ற ஆசை ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதோடு மகேஷ்பாபு உடன் நடிக்க வேண்டும் என்று ஆசை தனக்கு நீண்ட காலமாக இருப்பதாகவும், அப்படி அவர் படத்தில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்தால் அக்கா- அண்ணி போன்ற ஏதாவது கேரக்டர்களில் நடிப்பேன். ஒருபோதும் அவருக்கு அம்மாவாக மட்டும் நடிக்க மாட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.