பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

1990களில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. சமீப காலமாக முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள அவர், ஆந்திர அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். தெலுங்கில் 2013ம் ஆண்டு டாட்டர் ஆப் வர்மா என்ற படத்தில் நடித்திருந்தவர், தமிழில் கடைசியாக 2015ல் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நாயகனாக நடித்த ‛என் வழி தனி வழி' என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மீண்டும் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டுகின்ற ஆசை ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதோடு மகேஷ்பாபு உடன் நடிக்க வேண்டும் என்று ஆசை தனக்கு நீண்ட காலமாக இருப்பதாகவும், அப்படி அவர் படத்தில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்தால் அக்கா- அண்ணி போன்ற ஏதாவது கேரக்டர்களில் நடிப்பேன். ஒருபோதும் அவருக்கு அம்மாவாக மட்டும் நடிக்க மாட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.




