'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
1990களில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. சமீப காலமாக முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள அவர், ஆந்திர அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். தெலுங்கில் 2013ம் ஆண்டு டாட்டர் ஆப் வர்மா என்ற படத்தில் நடித்திருந்தவர், தமிழில் கடைசியாக 2015ல் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நாயகனாக நடித்த ‛என் வழி தனி வழி' என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மீண்டும் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டுகின்ற ஆசை ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதோடு மகேஷ்பாபு உடன் நடிக்க வேண்டும் என்று ஆசை தனக்கு நீண்ட காலமாக இருப்பதாகவும், அப்படி அவர் படத்தில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்தால் அக்கா- அண்ணி போன்ற ஏதாவது கேரக்டர்களில் நடிப்பேன். ஒருபோதும் அவருக்கு அம்மாவாக மட்டும் நடிக்க மாட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.