புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பின்னர் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் செலெக்ட்டிவான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாரூக்கானின் அதிரடி பெண்கள் படையின் தலைவியாக ஆக்ஷன் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இவரது நடிப்பிற்கு பாராட்டுக்களும் குவிந்தன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் ஐந்தாவதாக உருவாகி வரும் நேரு என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியாமணி.
தற்போது நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஜீத்து ஜோசப்பின் முந்தைய திரில்லர் படங்களைப் போல அல்லாமல் இந்த படம் ஒரு நீதிமன்ற டிராமாவாக உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011ல் வெளியான கிராண்ட் மாஸ்டர் என்கிற படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடித்திருந்தார் பிரியாமணி. அந்த வகையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.




