இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
மலையாளத்தில் கடந்த வெள்ளியன்று நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்த பத்மினி என்கிற திரைப்படம் வெளியானது. அபர்ணா பாலமுரளி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தை சென்னா ஹெக்டே என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகி ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளதுடன் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுனில் வர்க்கி என்பவர் நாயகன் குஞ்சாக்கோ போபன் மீது படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது குறித்து குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இந்த படம் கடந்த வாரமே வெளியாக வேண்டியது. ஆனால் மழை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி உள்ளது. ஆனால் படத்தின் நாயகன் குஞ்சாக்கோ போபன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் நண்பர்களோடு சேர்ந்து உற்சாகமாக சுற்றி வருகிறார். 25 நாட்களுக்கு அவருக்கு இரண்டரை கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. படம் எங்களுக்கு டீசன்டான வசூலை தந்து வருகிறது.. ஆனால் அது விஷயம் அல்ல..
நடிகர் குஞ்சாக்கோ போபன் பல டிவி நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது.. ஆனால் தன்னுடைய படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு அவரால் நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது ஆச்சரியம் தான் என்று கூறியுள்ளார்.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் குஞ்சாக்கோ போபன் தான். அப்படி இருந்தும் கூட அவருக்கு சம்பளமாக இரண்டரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சம்பளம் வாங்கிக் கொண்டும் புரமோசனுக்கு வராத காரணத்தால் படத்தின் தயாரிப்பாளர் தற்போது தான் வெளியிடும் போஸ்டர்களில் குஞ்சாக்கோ போபனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை நீக்கி விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியர் லண்டனில் தான் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின் போது நடிகர் குஞ்சாக்கோ போபன் அவரது மனைவி மற்றும் இன்னொரு நடிகரான ரமேஷ் பிஷரோடி ஆகியோருடன் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.