அஜித்தின் எதிர்கால ஆசை இதுதான்! - ஏ.எல்.விஜய் வெளியிட்ட தகவல் | 'வா வாத்தியார்' தடை விவகாரம்: உச்ச நீதிமன்றமும் ஸ்டுடியோ கிரீனுக்கு கொடுத்த அதிர்ச்சி! | 'அரசன்' படத்தில் இணைந்த ஆண்ட்ரியா! | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : அறிவிப்பை வெளியிடாத அளவிற்கு சண்டையா? | 2025ல் 'மத கஜ ராஜா' போல 2026ல் 'பார்ட்டி'யா ??? | அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிவைப்பு: கவலையில் கீர்த்தி ஷெட்டி | அவதாருக்கு பயந்து அமைதியான தமிழ் சினிமா | மம்மூட்டி...நிவின் பாலி....என வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்.....! | 'ஐ யம் கேம்' படத்தில் இணைந்த கயாடு லோகர்! | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்! |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வரும் கிச்சா சுதீப் அதை தாண்டி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் கூட நடித்து வருகிறார். தற்போது தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சுதீப். இந்த நிலையில் பிரபல கன்னடத் தயாரிப்பாளரான எம்.என்.குமார் என்பவர், சுதீப் தனது தயாரிப்பில் படம் நடிப்பதாக பணம் வாங்கிக்கொண்டு நடிக்க மறுத்து வருகிறார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். கன்னட திரையுலகில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக வேண்டுமென்றே தன் மீது அவதூறு கூறியுள்ளார் என்று தயாரிப்பாளர்கள் எம்.என்.குமார் மற்றும் எம்.என்.ரவி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சுதீப். இதில் இவர்கள் தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பத்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் கிச்சா சுதீப்.