நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வரும் கிச்சா சுதீப் அதை தாண்டி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் கூட நடித்து வருகிறார். தற்போது தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சுதீப். இந்த நிலையில் பிரபல கன்னடத் தயாரிப்பாளரான எம்.என்.குமார் என்பவர், சுதீப் தனது தயாரிப்பில் படம் நடிப்பதாக பணம் வாங்கிக்கொண்டு நடிக்க மறுத்து வருகிறார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். கன்னட திரையுலகில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக வேண்டுமென்றே தன் மீது அவதூறு கூறியுள்ளார் என்று தயாரிப்பாளர்கள் எம்.என்.குமார் மற்றும் எம்.என்.ரவி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சுதீப். இதில் இவர்கள் தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பத்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் கிச்சா சுதீப்.