தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

மலையாளத்தில் மோகன்லாலை வைத்து கீர்த்தி சக்ரா, குருசேத்ரா உள்ளிட்ட ராணுவ பின்னணி கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் மேஜர் ரவி. கடந்த 2012ல் மோகன்லால் நடிப்பில் இவர் கர்மயோதா என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. அதேசமயம் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அதை மேஜர் ரவி தன் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளார் என்றும் அந்த படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை நிறுத்தி வைக்க மனு தாக்கல் செய்திருந்தார் கதாசிரியர் ரெஜி மேத்யூ என்பவர். ஆனால் அந்த சமயத்தில் நீதிமன்றம் 5 லட்சம் பிணைத்தொகையாக தயாரிப்பு நிறுவனத்தை செலுத்த சொல்லி படத்தை வெளியிட அனுமதித்தது.
கிட்டத்தட்ட 13 வருடங்களாக கோட்டயம் வணிக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து, தற்போது இந்த கதை ரெஜி மேத்யூவுக்கு சொந்தமானது தான் என உறுதி செய்யப்பட்டு அவருக்கு நஷ்ட ஈடாக 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, படத்தின் கதைக்கான காப்பிரைட் உரிமையையும் ரெஜி மேத்யூவுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த படத்தின் காப்பிரைட் விஷயம் குறித்து மேஜர் ரவியிடம் அந்த சமயத்தில் கேட்கப்பட்டபோது, இந்த படத்தின் கதை குறித்து பல கதாசிரியர்களுடன் தான் விவாதித்துள்ளதாகவும் அதில் ரெஜி மேத்யூவும் ஒருவர் என்றும் அதை வைத்து அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்றும் அப்போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.